
கவுகாத்தி:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற
நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம்
அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல்
அளித்து சட்டமாக உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த
சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் தங்கள் மாநிலங்களில் இதை
அமல்படுத்தமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அசாம் அரசு
பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment