
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு
தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப
பெறப்படுவதாகவும், புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்
என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை
மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச
நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த
வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும்
முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட
வேண்டும் என்று கெடு விதித்தது.
இதையடுத்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில
தேர்தல் ஆணையம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு
நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி
பின்னர் அறிவிக்கப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில்
மொத்தம் உள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி
தேர்தல் நடைபெறுகிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு
உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524
கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டத்தில் 194 ஊராட்சி உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்படாது. உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து புதிதாக மீண்டும் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் கட்டத்தில் 194 ஊராட்சி உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்படாது. உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து புதிதாக மீண்டும் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment