
5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக
பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. 5 மற்றும் 8-ஆம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை
கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது
கல்விக்கு செய்யும் நன்மையல்ல... மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.
நீட்
தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல் தான் 5 மற்றும் 8-ஆம்
வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை.
நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு இந்தத் தேர்வுகளையும்
எதிர்க்க வேண்டும். அதன்படி 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான
பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி
செவ்வாய்க்கிழமை காலை பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும்
மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம்
நடத்தப்படும்.
சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில்
நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி
தலைமையேற்று நடத்துவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment