
புதுடில்லி: காவலில் வைத்து விசாரிக்க அனுமதி....பண மோசடி வழக்கில்
கைது செய்யப்பட்ட எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ஆம் தேதி வரை
காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி
அளித்துள்ளது.
டிஎச்எப்எல் நிறுவனம்
பல்வேறு வங்கிகளில் 13ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுப் போலியான 79
நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடன்கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது.
டிஎச்எப்எல்
நிறுவனத்தின் மொத்தக் கடனில் நாலாயிரத்து 450 கோடி ரூபாய் ராணா கபூரின்
எஸ் பேங்கில் பெற்றதாகும். இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல்
வாராக்கடனாக உள்ளது.
இதற்குக் கைம்மாறாக
ராணா கபூரும், அவரின் மகள்கள் இருவரும் இயக்குநர்களாக உள்ள டூயிட் அர்பன்
வெஞ்சர்ஸ் எனப்படும் நிறுவனத்தில் டிஎச்எப்எல் 600 கோடி ரூபாய் முதலீடு
செய்துள்ளது.
இந்தப் பண மோசடி
தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில்
வெள்ளி மாலை மும்பை ஒர்லியில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும்
அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது.
வெள்ளி
இரவில் ராணாகபூரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்,
சனிக்கிழமை தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரை
அழைத்துச் சென்றனர்.
அங்குப்
பகலிரவாக விசாரணை தொடர்ந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு அவரைக் கைது
செய்தனர். செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்
அவரை விடுமுறைக்காலச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்குச்
சரியாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், 5 நாட்கள் காவலில் எடுத்து
விசாரிக்க அனுமதி கோரினர். இதையடுத்து வரும் 11ஆம் தேதி வரை காவலில்
எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
No comments:
Post a Comment