
சென்னை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள்,
திரையரங்குகள் மூட பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் மது வாங்க டாஸ்மாக்
கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக
பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழகம் அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம்
முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தமிழகம் அரசால் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
கொரோனா நோய் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எளிமையாக பரவக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிகவாளகங்கள், மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்ப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மார்க்கெட், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் இனறி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா அச்சம் எதிரொலியாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் நோய் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த கொரோனா நோய் தடுப்பால் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டும் மூட்ப்படாமல் திறந்து சர்வசாதாரனமாக மதுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுக்கடைகள் காலை 12 மணிக்கு திறக்கும் மதுக்கடைக்கு காலை 10 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசுக்கு மதுவிற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருமான வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கொரோனா நோய் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எளிமையாக பரவக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிகவாளகங்கள், மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்ப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மார்க்கெட், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் இனறி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா அச்சம் எதிரொலியாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் நோய் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த கொரோனா நோய் தடுப்பால் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டும் மூட்ப்படாமல் திறந்து சர்வசாதாரனமாக மதுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுக்கடைகள் காலை 12 மணிக்கு திறக்கும் மதுக்கடைக்கு காலை 10 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசுக்கு மதுவிற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருமான வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
No comments:
Post a Comment