
டெல்லி: இந்தியாவில் ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை
விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு
அதிகரிப்பால் சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ஜூலை 15 வரை நிறுத்தி
வைக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து
மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment