
மாட்ரீட்
ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 என்ற விமானம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காஸ்டெல்லன் தீயணைப்பு வீரர்கள், வெகு நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானம்
பிரித்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட தீப்பொறியால்
விமானம் தீப்பிடித்ததாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர்
தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது இந்த விமானத்திற்கு பிரிட்டிஷ்
ஏர்வேசுக்கு உரிமை இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment