
தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியது. பின்னர் அந்த கட்சியினை அவரது தந்தை இயக்குனர் சந்திரசேகர் தான் ஆரம்பித்துள்ளார் என தெரிய வந்தது.
விஜய் மக்கள் இயக்கம் ஆனது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற விண்ணப்பம் செய்யப்பட்டு, இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திரசேகரன் பொருளாளர் சோபா என விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் கட்சி தொடங்குவதாக வெளியாகும் செய்தி பொய்யானது என அவரின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ட்விட்டரில் பதிவிட்டார். அதற்குள் சந்திரசேகர், என்னுடைய முயற்சியால் தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளேன். 23 ஆண்டுகளாக நான் விஜய்க்கு ரசிகராக இருந்து வருகிறேன். நான் தான் முதல் ரசிகன். என்னுடைய முயற்சியால் தான் இந்த விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது என தெரிவித்தார். ஆனால் கட்சியில் அவர் இணைவாரா என தெரியாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் விளக்கம் ஒன்றினை தனது, மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுளளார். அதில், "இன்று என் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.
அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டு படுத்த என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கு நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் எனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அவருடைய செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்
No comments:
Post a Comment