
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள கணபதிபுரம் என்ற கிராமத்தில் சங்கர் - சரிதா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் அஞ்சலி (14). இவர் கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிகள் விடுமுறை என்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அஞ்சலி, தனது சித்தப்பா வீடான ஆலங்குடி அருகேயுள்ள கே.வி.கோட்டைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலி அதேபகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிதி என்ற சிறுமியுடன் அப்பகுதியில் உள்ள பெருங்குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்துள்ளது. இதனை அறியாத அஞ்சலி குளிப்பதற்காக அந்த பள்ளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
அஞ்சலியை காப்பாற்ற அவருடன் சென்ற ஸ்ரீநிதி முயன்றதோடு அவரை காப்பாற்ற கோரி கூச்சலிட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் பணியில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஞ்சலியை பிரிசோதனை செய்த மருத்துவர்ள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து, தகவலறிந்த ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in
No comments:
Post a Comment