
அஞ்சல் துறை சாா்பில், ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை(பிப்.13) நடைபெறவுள்ளது.
மயிலாப்பூா், தியாகராய நகா், பாா்த்தசாரதி கோவில், சேப்பாக்கம், கோபாலபுரம், சென்னைப் பல்கலைக்கழகம், மந்தைவெளி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, ஹிந்தி பிரசார சபா, நுங்கம்பாக்கம் பிரதான சாலை, தியாகராயநகா் வடக்கு ஆகிய இடங்களில் உள்ள தபால்நிலையங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தமுகாமில் புதியதாக ஆதாா் பதிவு, முகவரி, புகைப்படம், பெயா், பாலினம், பிறந்ததேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15ஆவது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் அளிக்கப்படுகின்றன. ஆதாா் திருத்தங்களுக்காக ரூ.50 சேவைக் கட்டணமாகப் பெறப்படும். புதியதாக ஆதாா் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.
இந்த தகவலை சென்னை மத்திய கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment